எல்லையில் பாக்.,-கின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மன்கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு இந்திய படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகள், சுமார் 4 இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன.

இப்பகுதியில் பொது மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உரிய பதிலடியை இந்திய படையினர் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதம் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் தரப்பு தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...