குரூப்-4 தேர்வு: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு


கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்- 4 தேர்வினை ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, ஞாயிறன்று (இன்று) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்- 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 

''குரூப்- 4 தேர்வெழுத கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்து 863 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஞாயிறன்று (இன்று) 123 மையங்களில் நடைபெற்ற அத்தேர்வில் 36 ஆயிரத்து 964 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்கானிக்க 70 மொபைல் யூனிட்களும், 26 பறக்கும் படை குழுவும், 179 அறை கண்கானிப்பாளர்களும் கண்கானிப்பு பணியினை மேற்கொண்டனர். 

இதில், முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் தேர்வு நடைபெற்றது. மேலும், அனைத்து மையங்களையும் கண்கானிக்க வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இத்தேர்வு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...