குரூப்-4 தேர்வு: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு


கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்- 4 தேர்வினை ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, ஞாயிறன்று (இன்று) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்- 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 

''குரூப்- 4 தேர்வெழுத கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்து 863 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஞாயிறன்று (இன்று) 123 மையங்களில் நடைபெற்ற அத்தேர்வில் 36 ஆயிரத்து 964 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்கானிக்க 70 மொபைல் யூனிட்களும், 26 பறக்கும் படை குழுவும், 179 அறை கண்கானிப்பாளர்களும் கண்கானிப்பு பணியினை மேற்கொண்டனர். 

இதில், முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் தேர்வு நடைபெற்றது. மேலும், அனைத்து மையங்களையும் கண்கானிக்க வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இத்தேர்வு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...