மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் சிறப்பு பேட்டி!


சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமெனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் இணையதளம் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு மையத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், வழிபாட்டு உரிமை அனைவருக்கும் உண்டு என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என தெரிவித்தார். ஆனால் சில வழிப்பாட்டு தளங்களில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அனைத்து தரப்பு மக்களுக்கான வசதியாக இருக்க வேண்டுமென்ற வழிமுறை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமென என கூறிய அவர், அப்படி கேட்கப்படாமல் கேரள அரசு திடீர் முடிவு எடுப்பது எந்த வகையில் பொருந்தும் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விரும்பதகாதது என கூறிய அவர், மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே விவசாயிகள் பிரச்சணைகளுக்கு தீர்வு காண முடியுமென தெரிவித்தார். 

பொது சிவில் சட்டம் மதம் சார்ந்த கருத்து அல்ல எனவும், அனைத்து பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே பாஜகவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி பிரச்சணையை அரசியலாக்கி இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்பட்டு கர்நாடக அரசு கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தலை சந்தித்து ஆட்சி பிடிக்க முயல்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...