பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனை



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பெருகி வருவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்திடும் வகையில் இன்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை, பாலித்தீன் பைகளால் பல்வேறு உடல்நிலைப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதை தடுத்திடும் வகையில் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறும், குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள், பார்சல் வாங்க வரும் பொழுது பாத்திரங்களோ அல்லது துணிகளால் ஆன பைகளை கொண்டுவருமாறும் பொது மக்கள் அறியும் வகையில் அறிவிப்புப்பலகை வைத்திடுமாறும், தவிர்க்க முடியாத பட்சத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் துணிகளால் ஆன பைகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பைகளில் 95 சதவிகிதம் பிளாஸ்டிக் கலந்திருப்பதால் மக்கும் தன்மை கிடையாது, ஆகையால் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்கள் சீனிவாசன், விவேக் சீனிவாசன், நியூ ஆரிய பவன் ஹோட்டல் உரிமையாளர் பாலாஜி, சூரியா ஹோட்டல் உரிமையாளர் சுந்தர்ராஜன், சுப்பு மெஸ் உரிமையாளர் செந்தில்குமார், ஸ்ரீ ஆனந்தாஸ் ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், ஆர்.ஹெச்.ஆர் ஹோட்டல் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...