கோவையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் 25-வது கருத்தரங்கம்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் எட்டாவது பிராந்தியத்தின் 25வது மண்டல கருத்தரங்கம் வெள்ளி (இன்று) மற்றும் சனிக்கிழமையன்று கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் உள்ள 8 வேளாண் தட்பவெப்ப மண்டலங்களின் அடிப்படையில் எட்டு பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களின் வேளாண் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம் சார்ந்த திட்டங்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமறை விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் எட்டாவது மண்டலத்தின் 24வது பிராந்திய கருத்தரங்கம் கடந்த 2014ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், வேளாண்மை பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கடந்த இரண்டு அண்டுகளாக மேற்கொண்ட பணிகள் குறித்து விவாதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.



இன்று தொடங்கிய இந்த நிகழ்வில் எட்டாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு அகிய மாநிலங்களில் அமைந்துள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திற்குட்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் வனவியல் துறைகளைச் சேர்ந்த துணை வேந்தர்கள், ஆராய்ச்சி இயக்குநர்கள், விரிவாக்கத்துறை இயக்குநர்கள், முதல்வர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.



புதுவை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இக்கருத்தரங்கை துவங்கி வைத்தார். மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரலுமான முனைவர் திரிலோச்சன் மொகபத்ரா தலைமை உரை ஆற்றினார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் இதில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...