தெரு கூத்தாடிகளின் குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய ஈர நெஞ்சம் அறக்கட்டளை!


உலக அளவில் நாளை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாறுவேடப்போட்டி, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையை சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை சார்பில் தெருவில் சாட்டையால் அடித்தும், சாகசம் நிகழ்த்தியும் சம்பாதிக்கும் தெரு கூத்தாடிகளின் குழந்தைகளுடன் ஆடிப்பாடி இன்று குழந்தைகள் தினம் கொண்டாடினர். 



ஈர நெஞ்ச அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வர்கள் அந்த பிள்ளைகளுக்கு புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், திண்பண்டங்களை கொடுத்து அவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.



இது குறித்து,  சின்ன கண்ணய்யா என்பவர் கூறுகையில், 'எங்கள் போன்றோரை இந்த சமூகத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் கனவாகிப்போனது. தினமும் சாலைகளில் சாட்டைகளால் எங்களை நாங்களே அடித்து கொண்டும், பிளேடு, கத்தி போன்றவற்றால் உடலை கீறிக்கொண்டும் சம்பாதித்து வருகிறோம். எங்களைப் போல் கோவையில் 35 குடும்பங்கள் உள்ளன.



பள்ளி பருவம் முடிக்கும் எங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர்க்க சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் அரசு எங்களுக்கு சாதி சான்றிதழ் தர மறுத்து, பாட்டன் காலத்து ஆவணங்களை கேட்கின்றனர்.வீடில்லாத எங்களிடம் ஏது ஆவணங்கள்? இந்த வலியும், வேதனையும் எங்களோடு போகட்டும். அடுத்த தலைமுறையினராவது படித்து நல்ல வேலைகளில் சேர வேண்டும். அதற்கு அரசு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று சின்ன கண்ணய்யா கண்ணீர் மல்க  கூறினார்.

தொடர்ந்து ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் நிர்வாகி மகேந்திரன் கூறியதாவது :- 

தெருவில் கூத்தாடி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் குழந்தைகள் உண்டு. அவர்களும் கொண்டாடப்பட வேண்டிய மனித பிறப்புகளே. ஆனால் சமூகத்தில் யாரும் அவர்களை கண்டுகொள்வதில்லை.இதனால் இன்று அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாட முடிவு செய்தோம். அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கி மகிழ்வித்தோம். அரசு அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காதது, குழந்தைகளின் கல்வியை பாதிப்பதாக கூறுகின்றனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளத்தில் எத்தனை சோகம் இருந்தாலும்.....உடலை சாட்டையால் அடித்து பிழைக்கும் இந்த குழந்தைகளை இந்த தினத்தன்று நினைவுகூர்ந்து மகிழ்வித்த ஈர நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்! ஜாதி சான்றிதழ் இல்லாததால் படிக்க வழியில்லாமல் இருக்கிறோம் என கூறும் அந்த குழந்தைகளின் பெற்றோரின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீர்த்து வைத்தால், அடுத்த ஆண்டு குழந்தைகள் தினம் இவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாய் அமையும்!  



Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...