பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 24ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் அரசு அறிவிப்பு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி மத்திய அரசு திடீரென அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய  ரூ.500, ரூ.2000 நோட்டுகள் இதன் மூலம் மக்களிடம்  கொஞ்சம், கொஞ்சமாக   புழக்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.

பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்தது போக, ஏ.டி.எம்.கள் மூலமாகவும் மக்கள் பணம் பெற்று வருகிறார்கள். இன்று பொதுமக்கள் 5-வது நாளாக வங்கிகளை முற்றுகையிட்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள்.

இதற்கிடையே வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் பெறும் பணத்தின் உச்சவரம்பு  அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி வங்கிகளில் இன்று முதல் ரூ.4000க்கு பதில் ரூ.4500 வரை பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகள் மாற்றிக் கொள்ளலாம். அதுபோல ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம்.கள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய ரூ.500 நோட்டுகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்ததும் இந்த நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இன்னும் சில தினங்களில் நிலைமை சரியாகத் தொடங்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இதுபற்றி மத்திய அரசின்  உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அனைத்து சேவைகளுக்கும் பழைய ரூ.500,  ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க இயலாது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று  அறிவிக்கப்பட்ட போது, பெட்ரோல் பங்க், சுங்க சாவடி, ஆஸ்பத்திரி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நோட்டுகளை 11-ந்தேதி வரை மக்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த 3 நாள் அவகாசம் போதாது என்று தெரிய வந்ததால் 14-ந்தேதி வரை அதாவது இன்று வரை மேலும் 3 தினங்களுக்கு அத் தியாவசியத் தேவைகளுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று இரவுடன் அந்த  காலக்கெடு  முடிய இருந்தது.

இதனால் நாளை முதல் பெட்ரோல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், சுங்க சாவடி களில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த முடியாதே என்ற அச்சம் நாடெங்கும் ஏற்பட்டு இருந்தது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் பழைய ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் 24-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு இன்று காலை அறிவித்தது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெட்ரோல் நிலையங்கள், ஆஸ்பத்திரி களில் இன்னும் 10 நாட் களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாமானிய மக்கள் அடுத்த 10 நாட்களுக்கு பிரச்சினையின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...