56 வருட கலை சேவையை பாராட்டி ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர்

 பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு அமெரிக்காவில் நடந்த விழாவில் கவரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்தவர் நடிகர் ஜாக்கி சான். தனது அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் காமெடி முலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை  வசியப்படுத்தியவர். நடிகர், இயக்குனர், சண்டைக் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஜாக்கி சானுக்கு தற்போது 62  வயது. தனது ஐந்து வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கிய அவர், இப்போது 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு சினிமா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு உலகின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது  இதுவரை கிடைத்ததில்லை. 56 வருடமாக சினிமா துறையில் இருக்கும் ஜாக்கிசானுக்கு  கவுரவ விருது வழங்க, ஆஸ்கர் கமிட்டி முடிவு  செய்தது. அதன்படி, 8வது கவுரவ ஆஸ்கர் விருது வழங்கும் வண்ணமிகு விழா, அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நேற்று முன்தினம் இரவு  நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜாக்கி சான், எடிட்டர் ஆன் வி கோட்ஸ், காஸ்டிங் டைரக்டர் லின் ஸ்டால் மாஸ்டர் மற்றும்  ஆவணப்பட இயக்குனர் பிரெடரிக் வைஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் கலை சேவையை பாராட்டி கவுரவ ஆஸ்கர் விருது  வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின்  ஜாக்கிசான் பேசியதாவது: 23 வருடங்களுக்கு முன் சில்வஸ்டர் ஸ்டாலோனை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது  ஆஸ்கர் விருதை அங்கு பார்த்ததில் இருந்து அதை வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கடைசியாக இப்போது ஆஸ்கர் அகாடமியின்  தலைவர் ஐசாக் அழைத்து விஷயத்தைச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. எனது 56 வருட சினிமா வாழ்வில், 200 படங்களுக்கு  மேல் நடித்துவிட்டேன். படங்களுக்காக எனது எலும்புகள் பலவற்றை உடைத்து, கடைசியாக இந்த விருதை பெற்று விட்டேன்.  ஹாலிவுட்டுக்கு நன்றி. பல விஷயங்களை அது எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. அதோடு என்னை கொஞ்சம் பிரபலமாகவும் உருவாக்கி  இருக்கிறது. இங்கு இப்போது கவுரவிக்கப் பட்டிருக்கிறேன். இவ்வாறு ஜாக்கி சான் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...