கோவை: பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியை - தந்தை போலீசில் புகார்


கோவையில் தனியார் பள்ளியில் மாணவனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதேபகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் கிஷோர் சித்தாப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மேரி ராணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் யு.கே.ஜி பயின்று வருகிறார். 

இந்நிலையில் கடந்த வாரம் கிஷோர் பள்ளியில் உள்ள கழிவறையில் தண்ணீரை கொட்டியதற்காக அவரது வகுப்பு தமிழ் ஆசிரியை ஹன்சன்னி, கிஷோரை அடித்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த கிஷோருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. இதையடுத்து கிஷோரின் தந்தை மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவத்தையடுத்து கிஷோர் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாகவும், ஆசிரியை அடித்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் தந்தை மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சிறு மாணவ, மாணவிகளை இதுபோன்று கொடுமையாக தாக்கிய ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...