ரூபாய் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: பூடான் நோட்டுக்களை பயன்படுத்தும் அசாம் எல்லையோர கிராம மக்கள்

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.‘செல்லாது’ என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றவும், கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கிற நிலை, நீடிக்கிறது. அப்படி எடுக்கிற பணத்தையும் பொதுமக்களில் ஒரு தரப்பினர் புழக்கத்தில் விடாமல் பாதுகாக்கும் நிலையும் உள்ளதால், பண தட்டுப்பாடு முடிவுக்கு வராமல் தொடர் கதையாக நீளுகிறது.

நாடு முழுவதும் எந்த பாரபட்சமும் இன்றி மக்கள் திண்டாடி வரும் நிலையில், அசாம் மாநிலத்தின் எல்லையோர கிராம மக்கள் மாற்று வழியை கையாள  ஆரம்பித்துள்ளனர். அசாம் எல்லைப்பகுதியில் உள்ள பூடான் நாட்டு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பூடான் ரூபாய் மதிப்பின் தொகை 25 சதவீதம் அந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது.  எல்லையில் உள்ள டாட்குரி பகுதியில் பூடான் ரூபாய் தாள்களை அங்குள்ள சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் எளிதாக பெற்றுச்செல்கின்றனர்.

டாட்குரி கிராமத்தில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், இங்குள்ள கிராமங்களில் வங்கிகளோ, ஏடி.எம் மையங்களோ கிடையாது. ஏ.டி.எம் மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் 50 கி.மீட்டர் செல்ல வேண்டும். சவாலான சாலைகளில் அங்கு செல்வது கடினமான பணி ஆகும். எஸ்.பி.ஐ யின் நடமாடும் ஏ.டி.எம்  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருகிறது. எனவே இங்குள்ள மக்கள் பூடான் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.  பணம் வழங்குவதற்கு உரிய  நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...