வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரு ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: உக்கடம் பகுதியில் கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோதமாக பொதுமக்களிடம் பணம் வசூலித்து, வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி எண்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 3 மணியளவில் உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர் செல்போன் மூலம் லாட்டரி எண்களைப் பதிவு செய்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்துக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த பயாஸ்தீன் (33) என்பதும், தற்போது உக்கடம் கே.ஜி. லே-அவுட் பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, பரிசு விழுந்ததாகக் கூறி ஏமாற்றும் வகையில் சட்டவிரோத லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரிடம் இருந்து

இரண்டு ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்கள் லாட்டரி எண்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து, வாட்ஸ்-அப் மூலம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத லாட்டரி சூதாட்டம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...