வாகன நிறுத்துமிடம், கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூல்- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தைகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் செப்டம்பர் 7 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, வாகன கட்டணம் விபரப் பெயர் பலகை வைக்கப்படாதது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பெயர் பலகை வைக்கும் படி அறிவுத்தப்பட்டது.

மேலும், நவ. 15 ம் தேதியன்று ஆய்வு செய்யப்பட்ட போதிலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் கட்டண பெயர் பலகை வைக்கப்படவில்லை. 

மேலும், அதிக கட்டணம் வசூல் செய்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன குத்தைகைதாரர் சாந்தகுமார் என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.20 ஆயிரம், நவீன கட்டண கழிப்பிடத்தின் குத்தைகைதாரர் ஜமேஷா என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி நிதியில் சேர்க்கப்பட்டும் என்றும் அந்த இடத்தின பொது மின் ஏலத்தில் விடப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...