500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு முன்னறிவிப்பின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களிலும் போதுமான தொகை இல்லாமல் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து செயல்படும் மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவப் படத்தை காலணியால் அடித்தும், தங்களது பணப்பையில் இருந்து தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் போன்ற நகல் காகிதத்தை எடுத்து கிழித்து வீசி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...