டிசம்பர் இறுதிக்குள் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமருக்கு தூக்கு கயிறு அனுப்ப வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா முடிவு



கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் டிசம்பர் இறுதிக்குள் தற்போது நிலவும் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தை வெள்ளியன்று (இன்று) மாலை வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொது மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதாக குற்றம்சாட்டினர்.

பெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட 7 லட்சம் கோடி பணம் வாராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய வங்கிகளை காப்பாற்றவே மத்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் டிசம்பர் இறுதிக்குள் சரியாகிவிடும் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாகவும், பணப்பிரச்சனை டிசம்பர் இறுதிக்குள் தீரவில்லை என்றால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிற்றை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் தமிழக பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் சமரசப் படுத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...