வாடிக்கையாளர்களின் வங்கி ‘லாக்கர்’களை பறிமுதல் செய்ய திட்டமா? நிதி அமைச்சகம் விளக்கம்



புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் வங்கி ‘லாக்கர்’களை பறிமுதல் செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.

மத்திய அரசு மறுப்பு:
அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு, பல்வேறு விதமான வதந்திகள் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வரிசையில் தற்போது, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி ‘லாக்கர்’களுக்குள் வைத்து இருக்கும் நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற தகவலும் சேர்ந்து கொண்டு உள்ளது.

இதை மறுத்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பறிமுதல் கிடையாது:

வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் லாக்கர்களை பறிமுதல் செய்யப்போவதாக பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சிலர் சமூக ஊடகங்களில் திட்டமிட்டே இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகளை மக்கள் யாரும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.

இதேபோல் ரூ.50, ரூ.100 மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வருகிறது. இதையும் நம்பவேண்டாம்.

பயன் அடைவார்கள்:

சந்தையில் கருப்பு பண புழக்கத்தை தடுப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எனவே, ரூபாய் நோட்டு புழக்கத்தை சம்பந்தப்பட்ட அரசு இலாகாக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கவேண்டும்.

ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்று அறிவிப்பால் ஏழைகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டு உள்ளது. இது பொருளாதாரத்தை நிச்சயம் ஊக்கப்படுத்தும். இதன் முடிவில் ஏழைகளும், சமுதாயத்தில் பின்தங்கி இருப்போரும் பலன் அடைவார்கள்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கை அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட யாருக்கும் முன்கூட்டியே தெரியாது.

கடும் நடவடிக்கை:

பல இடங்களில் ஜன்தன் யோஜ்னா வங்கி கணக்குகள், குடும்பத் தலைவிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோருடைய வங்கிக் கணக்குகளை, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு தவறாக பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளன.

இந்த வங்கி கணக்குகளில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக கணக்கு வைத்திருப்போருக்கு பணப்பயன்கள், வெகுமதிகள் அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுபோல் வங்கிக் கணக்குகளை தவறாக பயன்படுத்துவோர் மீது வருமான வரி சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி தனது வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். (முன்னதாக ஜன்தன் யோஜ்னா கணக்கின் கீழ் ரூ.50 ஆயிரமும், மற்றவர்கள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்வரை தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறையின் வரம்புக்குள் வரமாட்டார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் இருக்காது எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.)

புதிய நண்பர்கள் வேண்டாம்:

எனவே இந்த முறையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக புதிய நண்பர்கள் யாரையும் வாடிக்கையாளர்கள் கூட்டு சேர்த்துக் கொள்ளவேண்டாம்.

இதுபோல் வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் பற்றி தகவலை தெரிவிக்கலாம். இவை அனைத்தும் வருமான வரித்துறையின் உடனடி நடவடிக்கைக்கு உட்பட்டது ஆகும். இதுபோல் சட்டவிரோதமாக மாற்றப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.

கருப்பு பணம் என்பது மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகும். மக்கள் அனைவரும் உதவி செய்யாதவரை கருப்பு பணத்தை ஒழிப்பது கடினம். அதற்கான நடவடிக்கைகளும் வெற்றி பெறாது. மனசாட்சியுள்ள நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசுக்கு உதவிட முன்வரவேண்டும்.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டு இருந்தது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...