ஓவியக் கண்காட்சி மூலம் திரட்டிய தொகையை திருநங்கைகளின் கல்விக்காக வழங்கும் திருநங்கை கல்கி


கோவை மாவட்டம், அவநாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி கிளப்பில் திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஏற்பாடு செய்திருந்த திருநங்கை கல்கி இதுகுறித்து கூறுகையில்,

என் வாழ்வில் மிகவும் விளையாட்டுத்தனமாக கடந்த மார்ச் மாதம் ஓவியத்தில் தனது பயணத்தை தொடங்கினேன். பின்னர்  மிகவும் தீவிரமாக இதில் நேரம் செலுத்தி ஓவியங்களை வரைய தொடங்கினேன். தற்போது இந்தியா முழுவதும் சில கண்காட்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விற்பனை ஆகும் ஓவியங்களுக்கான தொகையில் ஒரு பகுதியினை திருநங்கைகளின் கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். தற்போது 2 லட்சம் ரூபாய் வரை திரட்டி திருநங்கையரின் கல்விக்கு உதவப்பட்டுள்ளது.



திருநங்கைகள் தமது பெற்றோர், சமூகத்தினரால் கைவிடப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒரு கண்ணியமான வேலை கிடைக்கப்பெற வேண்டும். அவர்களுக்கும் கல்வி, திருமணம் போன்ற பல்வேறு கனவுகள் உள்ளது. ஆனால் அதனை அடையமுடியாமல் தவித்து வருகின்றனர்.



இந்த ஓவியக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் எனது ஓவியங்களுக்கான தொகையில் 60 சதவிகிதம் ஆதரவற்ற திருநங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். இச்சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டு வரும் திருநங்கைகளின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவுவது இந்த கல்வி மட்டுமே தான்'' என்றார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...