கோவை மாநகராட்சியின் சார்பில் ''உலக கழிப்பறை தினம்'' விழிப்புணர்வு பேரணி

கோவை மாநகராட்சியின் சார்பில் 28-வது வார்டுக்குட்பட்ட சரவணம்பட்டி, போயர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ''உலக கழிப்பறை தினம்'' விழிப்புணர்வு பேரணி கடைபிடிக்கப்பட்டது.



மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கலைக்குழுவினர் தாளம் அடித்துக்கொண்டே திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்ப்போம், சுகாதாரமான வீட்டுக் கழிப்பறையை உருவாக்குவோம் என்றவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்கும் விதத்தில் ''ஸ்வச் பாரத் மிஷன்'' சார்பில் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இதனை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்தான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையிலேயே உலக கழிப்பறை தினம் தற்போது கடைபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...