கோவை மாநகராட்சி வரியாக ரூ.52.87 கோடி வசூல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக நவ. 24ம் தேதியன்று ரூ.3.99 கோடியும் மற்றும் நவம்பர் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை மொத்தம் ரூ.52.87 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக நவம்பர் 24ம் தேதியன்று ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 

கிழக்கு மண்டலத்தில் ரூ.95.09 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.64.66 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.67.13 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.76.21 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.96.14 லட்சமும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக ஆகமொத்தம் ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.'' 

மேலும், கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக கடந்த நவ. 11 முதல் 24ம் தேதி வரை மொத்தம் ரூ.52.87 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.'' இவ்வாறு க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...