போக்குவரத்து விதி மீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைப்பு : துணை ஆணையர் சரவணன் தகவல்.


5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது :-

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி,  நாள் ஒன்றிற்கு 650 முதல் 7௦௦ வழக்குகள் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த 8ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அன்று முதல் மக்களிடம் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அத்தகைய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றிற்கு  40 முதல் 50 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

 கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...