கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாங்கிய கடனுக்கு அதிகமாக வங்கிகள் வட்டி வசூலிப்பதால் வங்கிகளுக்கு பணம் செலுத்த கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி வழங்கக் கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர். இதனிடையே அன்னூர் அருகே குப்பேபாளையம் பகுதியை சேர்ந்த துப்பாக்கி வேலுசாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். 

அம்மனுவில் பயிர்க் கடனுக்கு வங்கிகள் அதிகளவு வட்டியை வசூலிப்பதால் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாக தெரிவித்திருந்தார். எனவே தனது பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் விரைவாக பணம் சம்பாதிக்கும் வகையில் கொள்ளை, திருட்டுகள், கஞ்சா பயிரிடுதல், தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, காலம்காலமாக விவசாயம் செய்து வரும் தாங்கள் கடந்த சில ஆண்டுகள் வரை சரியான முறையில் வங்கி கடன்களை திரும்ப செலுத்தி அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனது, மின்வெட்டு, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை உள்ளிட்ட பிரச்சனைகளால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் வங்கிகளும் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டுமாறு மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். 

எனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு முடியாத பட்சத்தில் வேறு வழியின்றி தங்கள் பிள்ளைகள் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அவல நிலை உருவாகும் எனவும் அவர் அப்போது வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதேபோல, கோவை பேரூர் பகுதியில் வாழை விவசாயம் செய்து வரும் விவசாயி வாழை பயிரிட்டு 1000 வாழைகளை அறுவடை செய்யும் நிலையில் இருப்பதால் மத்திய அரசு அறிவித்தப்படி 2.5 லட்சம் ரூபாய் மட்டுமே வங்கியில் கட்ட முடியும். ஆனால், ஒரு வாழை 500 ரூபாய் வீதம் விற்பனையாகிக்கொண்டிருக்கும் நிலையில் 5 லட்சம் வரும் பணத்தை வங்கியில் வைப்பு வைத்தால் வருமானவரித்துறை பிரச்சனை, வாழையை வாங்குபவர்கள் ரசீது கொடுக்காததால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் கீழ் விவசாயம் சார்ந்த பொருட்களை வாங்குபவர்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...