கேழ்வரகின் விலை விவசாயிகளை மகிழ்விக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கேழ்வரகு சிறுதானிய பயிர்களில் மிக முக்கியமான உணவுப் பொருளாகவும், மிகுந்த ஊட்டச்சத்து வாய்ந்ததாகவும், சேமித்து வைக்க ஏதுவானதாகவும் உள்ளது. இந்திய தேசிய வேளாண்மை அமைச்சகத்தின் நான்காம் முன் மதிப்பீட்டின் படி, 2015- 16 ஆம் ஆண்டில் கேழ்வரகு 1.20 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.79 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கேழ்வரகு உற்பத்தியில் கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், உத்திரகாண்ட், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகள் பெரும் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குனரகம் மதிப்பீட்டின்படி 2014- 15 ஆம் ஆண்டு கேழ்வரகு 0.11 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 0.25 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாநிலத்தின் மொத்த கேழ்வரகு உற்பத்தியில் 87 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

டிசம்பர் மாத இறுதியில் கேழ்வரகின் சந்தை வரத்து ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து, வருடம் முழுவதும் சேமித்து வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாதகமற்ற பருவ மழையின் காரணமாக கேழ்வரகின் உற்பத்தி தமிழகத்தில் குறைந்துள்ளது. எனவே, கேழ்வரகிற்கு தேவை அதிகமாக இருப்பதால் வரும் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 10 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய கேழ்வரகு விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான கேழ்வரகின் பண்ணை விலையானது கிலோவிற்கு ரூ.20 முதல் 22 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் படி விதைப்பு முடிவுகளை எடுத்தால் அதிக பயன்பெறலாம்.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003 என்ற முகரிக்கோ, அல்லது, 0422- 2431405 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...