கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்



கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட்டின் முதுபெரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் சனிக்கிழமையன்று (இன்று) உயிரிழந்தார்.

1962 ஆகஸ்ட் 13ம் தேதியன்று கியூபாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. பல்வேறு செல்வங்களை பெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கியூபா மக்களின் அடிமை நிலையைக் கண்டு தனது வசதியான வாழ்க்கையை புறந்தள்ளி மக்களுக்காக அமெரிக்காவின் ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட துவங்கினார். 

கியூபாவில் நடைபெற்று வந்த அமெரிக்காவின் கைக்கோளான சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக போராடி அதிகாரத்தை கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. இதையடுத்து, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, 1959-ம் ஆண்டு முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1976-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்ற காஸ்ட்ரோ 2008 வரை அப்பதவியில் நாடுபோற்றும் சிறப்பான செயல்களில் ஈடுபட்டார். 

கியூபாவின் விடுதலை காலம் தொட்டு, கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக அதிபர் பதவியை தனது சகோதரர் ராவல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும், சோர்வடையாமல், தொடர்ந்து கியூபாவின் வளர்ச்சிக்காக திட்டமிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கியூபாவை தனிச் சிறப்புமிக்க நாடாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிடல் தனது 90-வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். 

இந்நிலையில், சில தினங்களாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பிடல் காஸ்ட்ரோ இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...