கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்



கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட்டின் முதுபெரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் சனிக்கிழமையன்று (இன்று) உயிரிழந்தார்.

1962 ஆகஸ்ட் 13ம் தேதியன்று கியூபாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. பல்வேறு செல்வங்களை பெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கியூபா மக்களின் அடிமை நிலையைக் கண்டு தனது வசதியான வாழ்க்கையை புறந்தள்ளி மக்களுக்காக அமெரிக்காவின் ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட துவங்கினார். 

கியூபாவில் நடைபெற்று வந்த அமெரிக்காவின் கைக்கோளான சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக போராடி அதிகாரத்தை கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. இதையடுத்து, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, 1959-ம் ஆண்டு முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1976-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்ற காஸ்ட்ரோ 2008 வரை அப்பதவியில் நாடுபோற்றும் சிறப்பான செயல்களில் ஈடுபட்டார். 

கியூபாவின் விடுதலை காலம் தொட்டு, கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக அதிபர் பதவியை தனது சகோதரர் ராவல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும், சோர்வடையாமல், தொடர்ந்து கியூபாவின் வளர்ச்சிக்காக திட்டமிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கியூபாவை தனிச் சிறப்புமிக்க நாடாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிடல் தனது 90-வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். 

இந்நிலையில், சில தினங்களாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பிடல் காஸ்ட்ரோ இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...