கோவை மதுக்கரையில் ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி


கேரளாவிற்கு உட்பட்ட பாலக்காடு வாளையாறு வனப்பகுதியிலும் இதையொட்டியுள்ள கோவை மாவட்டத்தின் மதுக்கரை வனப்பகுதியிலும் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழகம் - கேரளம் இடையிலான ரயில்பாதையே, யானைகள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயிலில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7.05 மணியளவில் பாலக்காட்டிலிருந்து வாளையாறு, மதுக்கரை வழியாக கோவை நோக்கி பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது வாளையாறு வனப்பகுதியில் உள்ள வட்டக்காடு என்ற இடத்தில் யானைகள் கூட்டம் ரயில் பாதையை கடந்து செல்ல முயன்றது. இதனிடையே, ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததால், கடைசியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று எதிர்பாராத வகையில் ரயிலில் சிக்கியது. 



ரயிலின் என்ஜின் மோதியதில் பலத்த காயமடைந்த யானை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை உயிரிழந்தது குறித்து ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், கேரள வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். விபத்து நடைபெற்ற இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அடக்கம் செய்யப்படும் என வனத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

யானைகள் இறப்பைத் தடுக்க மதுக்கரை - வாளையாறு வனப்பகுதியில் மணிக்கு 30 கி.மீ வேகத்துக்கும் குறைவாகவே ரயிலை இயக்க வேண்டுமென தமிழக, கேரள வனத்துறையினர் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடன் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது அந்த வேகக் கட்டுப்பாடு மீறப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மதுக்கரை - வாளையாறு இடையேயான வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களில் இதுவரை 4 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...