தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறுதரப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.



இதனிடையே, தமிழக முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைய வேண்டி கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை இன்று நடைபெற்றது.



இதில், குலோகா கோசலா என்னும் கோமாதா வழிபாடு அமைப்பும் இன்று துவங்கப்பட்டது. இதனை அதிமுக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்து சிறப்பித்தார். பக்தி வினோத் சுவாமி மகாராஜ் குத்துவிளக்கேற்றி வேத மந்திரங்களை முழங்க வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோமாதாக்களுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.அறுகுட்டி, அம்மன் கே.அர்ஜூணன் உள்ளட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.



முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி உதகை முத்துநாடு மந்து கோவிலில் பாரம்பாரிய தோடர் இன உடை அணிந்து சிறப்பு வேண்டுதல் நடைபெற்றது.

இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...