தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறுதரப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.



இதனிடையே, தமிழக முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைய வேண்டி கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் கோமாதா பூஜை இன்று நடைபெற்றது.



இதில், குலோகா கோசலா என்னும் கோமாதா வழிபாடு அமைப்பும் இன்று துவங்கப்பட்டது. இதனை அதிமுக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்து சிறப்பித்தார். பக்தி வினோத் சுவாமி மகாராஜ் குத்துவிளக்கேற்றி வேத மந்திரங்களை முழங்க வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோமாதாக்களுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.அறுகுட்டி, அம்மன் கே.அர்ஜூணன் உள்ளட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.



முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி உதகை முத்துநாடு மந்து கோவிலில் பாரம்பாரிய தோடர் இன உடை அணிந்து சிறப்பு வேண்டுதல் நடைபெற்றது.

இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் கலந்து கொண்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...