ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு


உடல் பருமன் எதிர்ப்பு  விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர்  26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.



ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் 136.1 யோகா அமைப்பும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமமும் இணைந்து நடத்திய இந்த உடல் பருமன் எதிர்ப்பு யோகா நிகழ்ச்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று யோகாவில் ஈடுபட்டனர்.



இந்நிகழ்ச்சியில், யோகா வல்லுநர் லோகேஷ்வரி அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிகப்படியான உடல் எடையும், பருமனும் மற்ற உயிரைப் பறிக்கும் நோய்களைப் போன்றதே. ஆண்டிற்கு சுமார் 2.8 மில்லியன் மக்கள் அதிகப்படியான உடல் பருமன் காரணமாக உயிரிழக்கின்றனர். மற்ற உயிர்கொள்ளும் நோய்களுக்கு உடல் பருமனும் ஒரு பாதையாக அமைகிறது. உடல் பருமனுக்காக தகுந்த சிகிச்சை பெறாமல் இருந்தால் புற்றுநோய், இருதய நோய், இரத்த அழுத்தம், கொழுப்புகள் அதிகரித்தல், தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் எளிதில்  தாக்கும் அபாயம் உள்ளது. உடல் பருமன் காரணமாக பெரும்பாலான மக்கள் மன அழுத்தமும், உலவியல் ரீதியான வேதனையையும் சந்தித்து வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் கட்டுப்பாடான உணவும், தகுந்த பயிற்சியுமே இதற்கான சிறந்த சிகிச்சை என பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சியும், உணவு பழக்கங்களுமே இதற்கு காரணம். இந்தியாவில் ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 41 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, குழந்தைகளும் இந்த நோயினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

மக்கள் தங்களது உடல் எடை மற்றும் பருமன் குறித்து பி எம்  ஐ மூலம் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். கலோரிகள் நிறைந்த  நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும். பசிக்கும் நேரத்தில் மட்டுமே உணவுகளை உட்கொண்டு தகுந்த உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மருத்துவ சிகிச்சைகள் இன்றி சிறப்பான உடல் ஆரோக்கியத்தினை பெற முடியும்'' என லோகேஷ்வரி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி துவக்கி வைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஏ.ரமேஷ், யோகா ஆசிரியர் ரிஷிகுமார் சந்தோஷ், 136.1 யோகா அமைப்பின் இயக்குநர் வி.செந்தில் குமார், பேராசிரியர் சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...