கோவையில் சேவல் சண்டை நடத்திய மூவர் கைது

கோவை ஆனைமலை யை அடுத்த களத்துப்புதூர் ரயிவே கேட் அருகே உள்ள மைதானம் ஒன்றில் சேவல் சண்டை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , உதவி ஆய்வாளர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அப்போது அங்கு  மூவர் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவதை கண்ட அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜோதீஷ்குமார் (33), முத்துசாமி(30) மற்றும் ஆனைமலையை சேர்ந்த  துரையப்பன் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் , சண்டைக்கு பயன்படுத்திய 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...