தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் அவசர கோலத்தில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பணப் பிரச்சனை 50 நாட்களில் தீர வாய்ப்பில்லை. பணப்புழக்கம் சீரடைய 7 மாதங்கள் ஆகும் என்றார்.

மேலும், பண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச ஏன் பயப்படுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், ஜனநாயகத்தை மதித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். சாதாரன மக்கள் பிரச்சனையை என்னிப் பார்க்காமல் கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம் என்பது வேடிக்கையானது.

பணம் எடுப்பதற்கு தினம்தினம் புதிய உத்தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அவசியம் அற்றது. இந்த தாள்கள் கருப்பு பணம் பதுக்கலை மேலும் எளிதாக்கும். புதிய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை அதிகளவில் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து, பயிர்கள் கருகுவதை பார்த்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

மேலும், தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...