சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகில் கோவை மாநகராட்சியும் ரூட்ஸ் நிறுவனமும் இணைந்து சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இன்று (30.11.2016) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். 



சாலை சுத்தம் செய்யும் வாகனம் சி.எஸ்.ஆர். புராஜக்ட் மூலம் “கிளீன் கோயமுத்தூர்” சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது. இந்த சாலை சுத்தம் செய்யும் இயந்திரமானது மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் தினந்தோறும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் உள்ள மண், கல் போன்ற இடர்பாடுகளையும், சாலையின் ஒரு புறங்களிலும் சேருகின்ற குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பேணி காப்பதற்கு ஏதுவான பணிகளை மேற்கொள்ளும். குறுகிய காலத்திற்குள் நீண்ட சாலை தூரத்தினை சுத்தம் செய்யும், மிகுந்த செயல்திறனும் நவீன தொழில்நுட்பங்களும் கொண்ட இயந்திரமாகும். 



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், ரூட்ஸ் குழும நிறுவனத் தலைவர் ராமசாமி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் கார்த்திகேயன், ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிஞர் கவிதாசன், தலைமை நிதி அதிகாரி ரவி, ரூட்ஸ் மல்டிகிளீன் நிறுவன செயல் இயக்குநர் சந்திரசேகர், ரூட்ஸ் இண்டஸ்டிரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவன செயல் இயக்குநர் சரவணசுந்தரம் உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...