கருவூல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்ட கருவூல அலகில் காலியாக உள்ள ஊதிய ஏற்ற முறையிலான 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்காக, வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் இதர தகுதியுடையோர்களும் தங்களது வயதுச் சான்று, கல்விச் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைக்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் கோவை- 641018 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2016 டிசம்பர் 30 ஆகும். இதற்கு 8ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கான வயதுவரம்பு 1.7.2016-யில் 30 வயதிற்கு மேற்படாத பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு உட்பட்டவர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...