கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண் காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் இலவச விழிப்புணர்வு முகாம் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி அரங்கத்தில் இன்று நடைபெற்றது. முகாமினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவங்கி வைத்தார். 


பின்னர், அவர் பேசுகையில்:-
பெண்கள் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றி கண்டுகொள்வதில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க முடியும். இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் 100 சதவீதம் வரை பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்துகிறது. 



இன்று கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்தும் இம்முகாமில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள பெண் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் அதுமட்டுமல்லாமல், இந்த விழிப்புணர்வு பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் எனக் கூறினார்.  

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...