ரூபாய் நோட்டு தடையின் மூலம் கார்ப்ரேட்டுக்கு பெரிய லாபமும், மக்களுக்கு பெரும் சுமையும் ஏற்படுத்துவதே மோடியின் திட்டம் - பி.ஆர். நடராஜன்


பண மதிப்பு நீக்க உத்தரவால் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான பதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தொழில் நகரமான கோவை. மோடி அரசின் உத்தரவால் தொழிற்துறை, வர்த்தகம், கட்டுமான தொழில்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் பாதியாக குறைந்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை விடுத்துள்ளார்.a

இதுகுறித்து சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் பாஜக அரசு முன் தயாரிப்பு இல்லாமலும் போதிய அளவு புதிய பணம் அச்சிட்டு வங்கிகளுக்கு பணம் அனுப்பாமல் பழைய ரூ.500, 1000 செல்லாது என்று உத்தரவிட்டதைத்தொடர்ந்து வங்கிகள், வங்கி ஊழியர்கள் பல்வேறு வகையில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

செல்லாத நோட்டுகள் பெருமளவு வங்கிகளுக்கு வந்துவிட்ட நிலையில் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் பணம் திரும்ப வழங்கக் கூடிய அளவிற்கு தற்போது வங்கிகளுக்கு போதிய நிதி இல்லாமல் அனைத்து தரப்பினரும் தவித்து வருகின்றனர். 

கோவையில் 58 கிளைகளுடன் செயல்படக் கூடிய ஒரு வங்கிக்கு 300 கோடி தேவையென்றால் 30 கோடி மட்டுமே அனுப்பி வைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு தற்போது மோடி அரசு அறிவித்துள்ள தொகையை கூட வழங்க முடியாமல் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சண்டையிட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம்களை தவிர இதர ஏடிஎம்கள் பணம் இல்லை என்ற போர்டு தொங்குகிறது. வங்கிகளில் போதிய பணம் இல்லாத காரணமாக வாடிக்கையாளர்கள் வாரம் 24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளது. பண நெருக்கடியில் நாடே தவிக்கும் போது பிக் பஜார் போன்ற கார்ப்ரேட் தனியார் நிறுவனங்களின் வியாபாரத்தை பாதுகாக்க பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது மோடி அரசு.

மோடி அரசின் ஸ்வைப்மெசின் திட்டத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் பொருள் வாங்கும் போது இரண்டரை சதவிகிதம் பணம் பிடித்தும் செய்யப்படும். இதன் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பெரிய லாபமும், மக்களுக்கு பெரும் சுமையும் ஏற்படுத்தும் திட்டம் தான் மோடியின் பண மதிப்பு நீக்க உத்தரவு. நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தினை அச்சடிக்காமல் கேஷ்லாஸ் திட்டம் என்ற பெயரில் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வர்த்தகத்திற்கு சாதகமாக மின்னனு பண பரிமாற்றம் என்ற பெயரில் சிறு, குறு வியாபாரிகளை இல்லாமல் செய்யும் மோடி அரசின் மோசடி திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும், வன்மையாக கண்டிக்க முன் வர வேண்டும். 

வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் கருப்புப் பணம் குறித்த தகவலையடுத்து சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சோதனையில் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, சம்பந்தப்பட்ட நபர் யார் என்ற விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. இதுபோன்ற ரகசியம் காப்பது பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை அரசு மறைமுகமாக பாதுகாக்கிறதோ என்கிற எண்ணம் ஏற்படுவதாக உள்ளது.

உடனடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்ட விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...