ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி துவக்கம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் அக்கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்புகள் குறித்து மூன்று நாள் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா கூறியதாவது:-

இந்நாட்டில் பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவிகிதம் உள்ளனர். ஆனால், அவர்கள் சமூகத்தில் வன்முறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் மீது தினிக்கப்படும் ஒடுக்குமுறையால் அவர்கள் சமுதாயத்துடன் ஒன்றிணையாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் யாரையேனும் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.



பெண்களாக நாம் மிகவும் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். தற்காத்துக்கொள்வது என்பது உடல் ரீதியிலான பிரச்சனைகளில் மட்டுமின்றி மனரீதியாகவும் பாதுகாத்துக்கொள்வது ஆகும்'' என்றார்.

அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் கூறியதாவது:-

பெண்களுக்கு அவர்களது தன்மானம் மிகவும் முக்கியம். இவ்வுலகில் ஒரு பெண்ணால் முடியாதது வேறு யாராலும் முடியாது. கடவுளின் படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.

இதுகுறித்து நமது நிருபருக்கு லதா சுந்தரம் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில், 

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். அது இக்காலத்தின் கட்டாயம். பெண்கள் என்று தாங்களாகவே பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். பின்பு அவதிப்படுகின்றனர். இந்த பயிற்சியானது பெண்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், அறம் அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் வழக்கறிஞர் டி.சிவகுமார், கோகுலராஜ், விவேக் ஆகியோர் மாணவிகளுக்கு தற்காப்புகள் குறித்த பயிற்சி அளித்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...