மாருதி சுசூகி ஓலாவுடன் இணைந்து ஓட்டுநர் பயிற்சி அளிக்க புதிய திட்டம் ஒப்பந்தம்



மாருதி சுசூகி  இந்திய லிமிடெட் நிறுவனமும், ஓலா கால் டாக்சி நிறுவனமும் இணைந்து ஓட்டுநர்களுக்கான பயிற்சி அளிக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாருதி ஓலா பயிற்சி என்னும் இந்த திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூதற்கட்டமாக பெங்களூர், சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்த உள்ளது.

இதுகுறித்து, மாருதி சுசூகியின் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது:-

மாருதி நிறுவனமானது சிறந்த முறையில் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துகிறது. வாகனம் ஓட்டுவதில் உள்ள குறைபாடுகளால்தான் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்பயிற்சியில் பங்குபெறுவோருக்கு வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி சீராக செயல்படுவது உள்ளிட்டவையும் கற்றுத்தரப்பட உள்ளது.

இப்பயிற்சி 370 மாருதி ஓட்டுநர்கள் பள்ளி மூலம் வழங்கப்பட உள்ளது. நாங்கள் 40 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு 3 வருடத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

ஓலாவின் முதன்மை செயல் அலுவலர் பிரனை ஜிவ்ராஜ்கா கூறியதாவது:-

மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அதனால், இத்துறையில் வளரும் சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது. நாங்கள் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஓட்டுநர்களை உருவாக்கப்போகிறோம்'' என்றார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...