மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 17 லாரிகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது



கோவையில் கடந்த அக்டோபர் மாதம் எட்டிமடையில் சிறை பிடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 20 வாகனங்களில் 17 வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. கேரள மாநிலத்தை ஒட்டிய கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது சிலர் சட்ட விரோதமாகக் கொட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி எட்டிமடையில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை அந்தப் பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.


இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர், கழிவுகளைக் கொட்டித் தரம் பிரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முகமது இலியாஸ், சாஜி, சபீர் மற்றும் ஓட்டுநர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 24 பேரைக் கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கு கோவை ஜெ.எம்.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கழிவுகளுடன் பிடிபட்ட வாகனங்களில் 17 வாகனங்களைத் திருப்பி அனுப்ப நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


அதன் பேரில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 17 வாகனங்கள் கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில் அவையும் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு விரைவில் திருப்பி அனுப்பப்படும் என்று க.க.சாவடி போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...