மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 17 லாரிகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது



கோவையில் கடந்த அக்டோபர் மாதம் எட்டிமடையில் சிறை பிடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 20 வாகனங்களில் 17 வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. கேரள மாநிலத்தை ஒட்டிய கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது சிலர் சட்ட விரோதமாகக் கொட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி எட்டிமடையில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை அந்தப் பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.


இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர், கழிவுகளைக் கொட்டித் தரம் பிரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முகமது இலியாஸ், சாஜி, சபீர் மற்றும் ஓட்டுநர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 24 பேரைக் கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கு கோவை ஜெ.எம்.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கழிவுகளுடன் பிடிபட்ட வாகனங்களில் 17 வாகனங்களைத் திருப்பி அனுப்ப நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


அதன் பேரில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 17 வாகனங்கள் கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில் அவையும் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு விரைவில் திருப்பி அனுப்பப்படும் என்று க.க.சாவடி போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...