துப்புரவு தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

கோவையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் கடந்த சனிக்கிழமை கக்கன் நகர் பகுதியில் துப்புரவு பணி செய்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மாரிமுத்து துப்புரவு தொழிலாளி கனகராஜினை தாக்கிதாக கூறப்படுகின்றது. இதில் காயமடைந்த கனகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், இதுவரை கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.



இந்நிலையில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது துப்புரவு தொழிலாளி கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டத்தினரை கலைந்துபோக சொல்லி காவல் துறையினர் எச்சரித்தும் அவர்கள் காவல் நிலையம் முன்பாக இருந்து போக மறுத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...