ஜெயலலிதாவின் மகள் என்ற வதந்தியால் மனவேதனையடைந்த திவ்யா குடும்பம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை பெருத்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் மறைந்த ஜெயலலிதாவின் உண்மை மகள் இவர்தான் என திவ்யா ராமநாதன் வீரராகவன் என்ற பெண்ணின் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போலவே தோற்றமளிக்கும் அந்த பெண் குறித்த புகைப்படங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரும் பலமுறை மறுப்பு தெரிவித்து வெளியிட்ட தகவல்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.

இதுகுறித்து பிரபல பின்னணி பாடகியும், திவ்யா ராமநாதன் வீரராகவன் உறவினருமான சின்மயி ஸ்ரீபதா தற்போது சமூகவலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இப்புகைப்படத்தில் உள்ள திவ்யா ராமநாதன் வீரராகவன் என்னுடைய உறவினர். இவரை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரைக் குறித்து சில காலமாக சமூக பக்கத்தில் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஜெயலலிதாவிற்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை எனது உறவினர்களும், நண்பர்களும் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.



இதைத்தொடர்ந்து இசைக் கலைஞர் வித்வான் வி.பாலாஜி வதந்திகுறித்து சமூக வளைதளத்தில் சின்மயி ஸ்ரீபதா பதிவுசெய்த கருத்தை பகிர்ந்தார். மேலும் அந்த பதிவில், இத்துடன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என நம்புவதாகவும், இதனால் அந்த பெண்ணின் குடும்பம் ஊடகங்களின் பாரவையில் இருந்து தப்பும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...