வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் உணவு மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் விரைவு


சென்னை மாநகரத்தை தற்போது மையம் கொண்டு வர்தா என்னும் புயல் பலத்த காற்றுடன் வீசிவருகிறது. மணிக்கு 110 முதல் 160 கிலோ மீட்டர் வரை வர்தா புயல் காற்று வீசுவதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையும் பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் மக்கள் அரசு பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



இதனைத்தொடர்ந்து, தற்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் , உணவு, உடை, துண்டு, போர்வை, சோப்பு, பற்பசை, தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி- ஜாம், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள், காயத்திற்கான மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கோவை மாநகர மக்கள் தங்களால் இயன்றதை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணிக்குள் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட பொருட்களை வழங்குமாறு மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 8056472237, 7708950011, 9791985668

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...