வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் துப்புரவாளர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சென்னை மாநகரத்தை மையமாகக் கொண்டு வர்தா என்னும் புயல் திங்களன்று பலத்த காற்றுடன் வீசியது. இதில் மணிக்கு 130 முதல் 190 கிலோ மீட்டர் வேகம் வரை வர்தா புயல் காற்று வீசியதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. மழையும் பெய்ததால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதைத் தொடர்ந்து மக்கள் அரசு பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள் மற்றும் உணவு, உடை, துண்டு, போர்வை, சோப்பு, பற்பசை, தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி- ஜாம், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள், காயத்திற்கான மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க முடிவுசெய்யப்பட்டது.

இதற்கு, கோவை மாநகர மக்கள் தங்களால் இயன்ற பொருட்களை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, திங்களன்று இரவு பல நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. 



இதைத்தொடர்ந்து, சென்னையில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்யும் விதமாக கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள், 10 துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் 2 துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட சாமான்களுடன் சென்னைக்கு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

முன்னதாக, அந்த வாகனங்களை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...