ஜெயலலிதா உயிரிழந்ததை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிக்கிறது என எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் குற்றச்சாட்டு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஏற்படுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெளகலான் பாகவி குற்றம்சாட்டியுள்ளார்.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பாகவி, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்தார். 

அ.தி.மு.க கட்சியில் அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவது உட்கட்சி விவகாரம் எனவும், அது குறித்து மற்றவர்கள் கருத்து சொல்ல தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிட்டத்தை பயன்படுத்தி பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பதாகவும், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கவனத்துடன் செயல்பட வேண்டுமெனவும் தெளகலான் பாகவி தெரிவித்தார்.

பணம் மதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு சாதாரண ஏழை மக்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்து இருப்பதாகவும், 35 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவது மத்திய அரசு தோல்வியடைந்து இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

வர்தா புயல் நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அக்கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெளகலான் பாகவி வலியுறுத்தினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...