தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் குளோபல் கேர் சென்டர் திறப்பு விழா

உலகிலுள்ள வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இத்தகைய காலகட்டத்தில் மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகின்றது.

இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாசுபட்ட இடத்தை சரிசெய்தலுக்கான சர்வதேச மாநாடு "இந்தியாவை தூய்மைப்படுத்தல் 2016" என்ற பெயரில் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையமும், நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றது.

இந்த மாநாட்டின் ஓர் அங்கமாக சர்வதேச சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான மையம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படுகின்றது. சர்வதேச கூட்டமைப்பான இந்த மையம், ஒவ்வொரு தனிமனிதனையும், அரசாங்கத்தையும், அறிவியலையும், தொழில்துறை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும் வழிநடத்துவதோடு, ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்கவும் உறுதுணையாக அமைகிறது. 

உலக அளவில் மாசுபாட்டைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளையும் வகுத்து, மாசு கலப்படத்தைத் தவிர்த்துப் பசுமை உற்பத்தி கோட்பாட்டினை மேம்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளது. 

இந்த மையத்தின் நோக்கமானது, மனிதனால் விளையும் மாசு கலப்படத்தினைக் குறைக்க, புதிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள, நவீன மதிப்பீட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்க, நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளையும் மேம்படுத்த, தலைசிறந்த வல்லுனர்களிடையே தகவல்களைப் பரிமாற்றம் செய்ய ஓர் உலகளாவிய இணையமாக விளங்குவதே ஆகும்.

மேலும், இந்த மையம் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிவுப் பகிர்விற்கு வழிவகுப்பதோடு மாணவர்களின் ஆய்வுகளுக்கும் தொழில் துறையின் மாசுபாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பரிந்துரை செய்யவும் பயனுள்ளதாக அமையும். இந்த அமைப்பானது தூய்மைமிகு சர்வதேச இணக்க நிலையைத் தனிநபர், அரசாங்கம், தொழில்துறை, சமூக அமைப்புகள் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளிடையே உருவாக்கும்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...