பாரதியார் பல்கலை சார்பில் தென் மண்டல பல்கலைக் கழகங்களிடையிலான மகளிர் கபடி போட்டி துவக்கம்


பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வித் துறை 2016-ஆம் கல்வி ஆண்டின் தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையிலான மகளிர் கபடி போட்டியை நடத்துகிறது. இதில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 54 பல்கலைக கழகங்கள் பங்கேற்கவுள்ளன.



டிசம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிக்கான துவக்கவிழா புதனன்று பாரதியார் பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், பேராசிரியர் முனைவர் ஏ.கணபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி பேசியதோடு பல்வேறு பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏறறுக்கொண்டார்.



இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் முன்னாள் இந்திய கபடி வீரர் அர்ஜூனா விருதுபெற்ற பி.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.

உடற்கல்வித் துறை தலைவர் மற்றும் இந்த போட்டியின் அமைப்புச் செயலருமான முனைவர் கே.முருகவேல் வரவேற்றுப் பேசினார். இணை செயலாளர் முனைவர் ஜி.குமரேசன் மற்றும் முனைவர் பி.முருகேஷ்வரி ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கான மகளிர் கபடிப்போட்டிகள் பல்கலைக் கழக விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...