சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுரை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டுமென சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், காவல் துறையினர் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் கொலை நடந்த நாளான்று பதிவான சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் சசிகுமாரின் செல்போன் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் உத்தேச வரைபடங்கள் வெளியிட்ட போதும், எந்தவித துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி காவல் துறையினர் திணறி வருகின்றனர். 

இந்நிலையில் சசிகுமார் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி காவல் துறை பொது ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசணை மேற்கொண்டார். 

அப்போது இதுவரை வழக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கிடைத்துள்ள தடயங்கள், வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழக்கை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கிய அவர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...