பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் - 6வன சரகங்களில் 13 க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் பங்கேற்பு.


பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு என மாமிச உண்ணி, தாவர உண்ணி விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் விலங்கு இடம் பெயர்ந்துள்ளாதா? அதிகரித்து உள்ளாதா? என ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது .

 

அதன்படி இந்தாண்டுக்கான குளிர் கால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலரந்தி, வால்பாறை, மானாம்பள்ளி , உடுமலை, அமராவதி ஆகிய 6 வனசரகங்களில் 124 நேர்கோட்டு பாதையில் 130 க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் தன்னாவாளர்கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துக் கொண்டு கணக்கெடுக்கும் பணியில் நேற்று  காலை 6 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வனசரக பகுதியில் வனசரகர் ரவிசந்திரன் தலைமையில் போத்தமடை, சேத்துமடை, ஆழியார் வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுக்கும் பணியில் முதல் 3 நாட்களுக்கு மாமிச உண்ணிகளும், அடுத்த 3 நாட்களுக்கு தாவர உண்ணிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தபடுகிறது. கணக்கெடுப்பின் போது நேர்கோட்டில் உள்ள வன விலங்குகளின் ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு விலங்கு களின் கால்தடம், எச்சம், நக கீறல்கல் உள்ளிட்டவை மூலம் கணக்கெடுக்கபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த வனப்பகுதியில் உள்ள பினம் தின்னி கழுகுகளும் இதில் கணக்கெடுக்கபடுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லததால் வனப்பகுதியில் தண்ணீர் பற்றக்குறை காரணமாக  பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்துள்ள காரணத்தால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விலங்குகள் தென்படாததால்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...