கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற வைகோவிற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து கோவையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோவிற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து கோவையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு சென்றார். ஆப்போது திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்குள் செல்ல வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை நோக்கி செருப்பு மற்றும் கற்களை வீசினர். 

கருணாநிதியைக் காண வைகோ மருத்துவமனைக்கு வருவதாக திமுகவின் நிர்வாகிகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்திருந்த நிலையுலும் அசம்பாவிதம் நடைபெற்றதால் மருத்துவமனைக்குள் செல்லாமலேயே வைகோ திரும்பிச் சென்றார். 

திமுக-வினரின் இந்த எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து மதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் மாவட்ட மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...