சாட்டிலைட் டிஷ் மூலம் தமிழகம் முழுவதும் ஈஷா யோகா வகுப்பின் ஆனந்த அலை நேரடி ஒளிபரப்பு

சத்குருவால் நேரடியாக தமிழில் நடத்தப்படும் ஈஷா யோகா 2-நாள் வகுப்பு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. முதல் முறையாக சாட்டிலைட் டிஷ் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள 63 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

மேலும், இவ்வகுப்புகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 21 ஆயிரத்து 786 பேர் பங்கேற்றனர். சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு சத்குரு எடுக்கின்ற நேரடி தமிழ் வகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழகம் முழுவதும் நேரலை வகுப்பு

சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், முக்கிய இடங்களில் இவ்வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் தேர்ச்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் பங்கேற்பாளர்களுக்கு துணை இருந்தனர். இவ்வகுப்பிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் மூலம் மதிய உணவு பரிமாறப்பட்டது. 



ஈரோடு, தர்மபுரி, சேலம், கோபி, ஓசூர், காங்கேயம், கிருஷ்ணகிரி, பெருந்துறை, திருப்பூர், வெள்ளக்கோவில் உட்பட தமிழகத்தின் மேற்கு மாவட்ட நகரங்களில் நடைபெற்ற யோக வகுப்புகளில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற வகுப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்





இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:-

நான் வழங்கும் இந்த யோக வகுப்பில் தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ் மக்களின் உயிர்துடிப்பிற்கு தலைவணங்குகிறேன். சில தலைமுறைகளுக்கு முன் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஆன்மீகசாதனை இருந்தது. அதனை மீண்டும் உருவாக்குவதற்கான நேரமிது. 

36 வருடங்களுக்கு முன் துவங்கிய இந்த தன்னை உணர்தலுக்கான அமைதிப்புரட்சி இனியும் அமைதியாய் இல்லை, கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. பல பேரின் உயிர்களை, இத்தனை சக்தியாய் தொடுவதற்கான ஒரு வாய்ப்பு பல தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இதனை நாம் நிகழச் செய்வோம்" என்றார்.

ஈஷா யோகா சார்பில் சென்னை 10 ஆயிரம் மரக்கன்றுகள்:-

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வகுப்புகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும் இலவசமாக சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனை நட்டு, பாதுகாத்து வளர்க்க அனைவரும் உறுதி எடுத்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...