சிறந்த மாநகராட்சி சேவைக்காக' டிஜிட்டல் இந்தியா' விருது பெற்ற கோவை மாநகராட்சி ஆணையர்



மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, மாநகராட்சியில் கவனிப்பாரற்று உள்ள குப்பைத் தொட்டிகள், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக என பல திட்டங்கள் டிஜிட்டல் வழியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வுகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மேற்கொண்டார்.

மேலும், பல திட்டங்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்து ஏராளமான தகவல்கள் மற்றும் நலத்திட்டங்களை நடைமுறையில் கொண்டுவந்துள்ளார்.



இதனை பாராட்டும் வகையில், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா விருது 2016 கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயனுக்கு திங்களன்று வழங்கப்பட்டது.

புதுதில்லியில் அமைந்துள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌதிரி ஆகியோர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்க்கு டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கினர்.

இந்நிகழ்வின் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், கூடுதல் செயலாளர் அஜய்குமார், மத்திய தகவலியல் மைய தலைமை இயக்குநர் நீட்டா வெர்மா மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் அல்கா மிஸ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா விருதும் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை நகர மாநகராட்சி மட்டுமே குடிமக்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள நகரமாகும். இது கோவை வாழ் மக்களுக்கு ஒரு பெருமைமிகு தருணம். நம்முடைய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அதற்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் மாநகராட்சியின் மேம்பாட்டில் பங்கேற்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு 26 திட்டம் சார்ந்த வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளது. அக்குழுக்கள் மூலம் தற்போதுவரை 40 திட்டங்கள் குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன், பல்வேறு கட்ட குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுவதே ஆகும்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...