வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வங்கியாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை


வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு உடனடியாக மாதாந்திர ஊதியம் வழங்க நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி வங்கியாளர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆலோசனை மேற்கொண்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று (இன்று) நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்  ஆலோசனைப்படி வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள மாதாந்திர ஊதியத் தொகையினை உடனடியாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கடந்த ஒருமாத காலமாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வங்கியின் மூலம் வழங்கப்பட்டு வருவதுடன் பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை திரும்ப பெறும் பணி நடைபெற்று வருவதாலும் ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவதாலும் சில காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு வால்பாறை தேயிலைத்தோட்டப் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்குவதில் வங்கிகளுக்கு திடீர் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க சில ஆலோசனைகள் வங்கியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வால்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் பாரத வங்கி, இந்திய வங்கி, யூனியன் வங்கி ஆகிய வங்கிகள் மூலம் நாளை முதல் தேயிலைத்தோட்ட நிறுவனங்களுக்கு சென்று பணியாளர்களிடம் ஒப்புதல் படிவம் பெற்று தேயிலைத்தோட்ட நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்யப்படும்.

அதேப்போல் ஒவ்வொரு தேயிலைத்தோட்ட நிறுவனத்துக்கும் நேரில் சென்று பணியாளர்களுக்கு பணம் வழங்கும் விவரம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மேலும், மூன்று வங்கியின் மூலமாக நாளை முதல் பணப்பரிவர்த்தனை துவங்கி பத்து தினங்களுக்குள் அப்பகுதியிலுள்ள அனைத்து தேயிலைத்தோட்ட பணியளர்களுக்கும் நிலுவையிலுள்ள கடந்த மாத ஊதியத்தொகை வழங்கப்படும்.

வங்கி கணக்கு தொடங்காத பணியாளர்கள் உடனடியாக வங்கி கணக்கு துவங்கிக்கொள்ள வேண்டும். எனவே அனைத்து தேயிலைத்தோட்ட பணியாளர்களும் வங்கியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களுக்குரிய பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஸ்துராஜ், தொழிலாளர் நலவாரிய இணை ஆணையர் மாரிமுத்து, வால்பாறை நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அமீது, முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம் மற்றும் வங்கி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...