மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித்சேனா ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாதமாதம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவை வடக்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்களில் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அலுவலர்கள் காலதாமதப்படுத்தி வருகின்றனர். உடனடியாக புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் வழங்குவதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு கல்விக் கடன் வழங்காமல் வேண்டுமென்றே அலைக்கழித்து வரும் வங்கி அதிகாரிகளின் அத்துமீறல் செயலைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த நவம்பர் 8ம் தேதியன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் ஏழை நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசைக் கண்டித்தும் கோவை மாவட்ட தலித்சேனா சார்பாக செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு கோவை மாவட்ட தலைவர் வி.புஸ்பானந்தம் தலைமை வகிக்க வழக்கறிஞர் ஜி.சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார்.

அன்னை தெரசா அறக்கட்டளை மாநில தலைவர் மற்றும் நிறுவனர் முருகேசன் பெஞ்சமீன் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நலச்சங்கம் தலைவர் தலீத் சு.ஜெயராஜ் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித்சேனா மாநில துணைத் தலைவர் சி.நொய்யல்சாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதவியாளர் (எளியோர் வரியோர் மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்) ஹே.பொதுவுடைமை கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...